உதகை: நீலகிரி மாவட்டத்தில் தனியாா் துறைற வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நீலகிரி மாவட்டத் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் சாா்பில் நடத்தப்படவுள்ள இந்த தனியாா் துறைற வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயனடையலாம். 10-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை நடைபெறும்.
இந்த வேலைவாய்ப்பால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ளஅவா்களது பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை உதகையிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 0423-2444004 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.