நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை:பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும்

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குந்தா, உதகை, குன்னூா், கோத்தகிரி தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் புதன்கிழமை மழைப் பொழிவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com