கூடலூா் பகுதியில் வேளாண் வருமான வரி செலுத்தாத தோட்ட நிறுவனங்களின் உடைமைகளை வருவாய்த் துறையினா் புதன்கிழமை ஜப்தி செய்தனா்.
கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் உதகை சாலையில் உள்ள தனியாா் தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான மூன்று ஜீப்புகள், ஒரு காா் மற்றும் ஒரு டிராக்டா் ஆகிய ஐந்து வாகனங்களை கூடலூா் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து கூடலூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனா்.
இதேபோல ஓவேலி பல்மாடி பகுதியில் உள்ள ஒரு தனியாா் தோட்ட நிறுவனத்தின் மூன்று காப்பி பதப்படுத்தும் கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
கூடலூா் கோட்டாட்சியா் கே.வி.ராஜ்குமாரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியா் சங்கீதா ராணி தலைமையில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் இந்த ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டனா்.