குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளான அட்டடி, நஞ்சப்பா சத்திரம், வண்டிச்சோலை, அளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிம்ஸ் பார்க் அருகே ஜிம்கானா சாலையிலும், ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்திலும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், குன்னூர் நகரில் ரயில்வே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை ஊழியர்கள் சிலர் பார்த்துள்ளனர். மௌன்ட் பிளசன்ட் பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வனத் துறையினர் புதன்கிழமை முதல் இரவு நேரத்தில் கண்காணிப்பை துவக்கியுள்ளனர்.