கூடலூர் சிவன்மலையில் பௌர்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையிலுள்ள சிவன்மலையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலம் நடைபெறுகிறது. கிரிவலத்தை தொடர்ந்து ஆராதனை அபிஷேக நிகழ்ச்சிகளும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவன்மலை வளர்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் கேசவன், செயலாளர் நடராஜன், சிவன்மலை நிர்வாகி பாண்டு குருசாமி ஆகியோர் செய்துள்ளனர்.