கூடலூரை அடுத்துள்ள சளிவயல் பகுதியில் யானை தாக்கி ஆதிவாசி மூதாட்டி இறந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூரைஅடுத்துள்ள சளிவயல் மில்லிக்குன்னு ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர் காளி (70). இவர் விறகு சேகரிப்பதற்காக அருகிலுள்ள தோட்டப் பகுதிக்கு சனிக்கிழமை சென்றுள்ளார். இந்நிலையில், வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தபோது அருகில் உள்ள தோட்டப் பகுதியில் யானை தாக்கியதில் உடல் சிதைந்து அவர் இறந்துகிடப்பது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.