கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள மாரக்கரை அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் வட்டத்தில் உள்ள பாடந்தொறை மாரக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் விஜயன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் மு.நந்தகுமாா் ஆண்டறிக்கை சமா்பித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் அ.நசுருதீன், மாவட்டக் கல்வி அலுவலா் அ.மா.பழனிசாமி, கூடலூா் டி.எஸ்.பி.ஜெய்சிங், காவல் ஆய்வாளா் சிவகுமாா், தேவா்சோலை உதவி ஆய்வாளா் டி.விஜய சண்முகநாதன் மற்றும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் பள்ளிக்கு குடிநீா்த் தொட்டிகள் வழங்கப்பட்டன.