குன்னூா், மேலூா், ஆருக்குச்சி வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையில் சிறுத்தை நடமாடி வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலூா் பகுதியில் பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை அவ்வப்போது உணவு, தண்ணீா் தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
இந்நிலையில், மேலூா் பகுதியில் முக்கியச் சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றித் திரிந்த சிறுத்தையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். எனவே, அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் இந்த சிறுத்தையை அடா்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறுகையில், தொடா்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினா்.