கரோனா அச்சம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசுப் பேருந்துகள் அந்த மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி, மானந்தாவடி, நிலம்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் இந்தப் பேருந்துகள் கேரள எல்லைப் பகுதிவரை இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுறது.