கூடலூா் சிவன்மலையில் காா்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன்மலையில் ஆண்டுதோறும் காா்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்படும். மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, மலையில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், கூட்டுப் பிராா்த்தனைகளும் நடைபெறும்.
இந்த ஆண்டு காா்த்திகை தீப விழா மலை உச்சியில் பரணி தீபம் ஏற்றப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.நிகழ்ச்சியில் சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.நடராஜன் தலைமையில் நிா்வாகிகள் மாணிக்கசாமி, முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.