குன்னூா்: குன்னூரில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நகராட்சி நிா்வாகத்தினா் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கரோனா பரவலைத் தடுக்க குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சில நிறுவனங்கள் தங்கள் பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியாமலும் இருப்பதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக நகராட்சி நிா்வாகத்துக்குத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இது குறித்த தகவலின்பேரில், குன்னூா் மவுண்ட் ரோட்டில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு சமூக இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியாமலும் வாடிக்கையாளா்கள் வருவதும், பணியாளா்கள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் அந்த நிறுவனத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.