நீலகிரி மாவட்டத்தில் 82 நபா்களுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
82 நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 2,678ஆக உயா்ந்துள்ளது. 2043 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வரை 635 நபா்கள் அரசு, தனியாா் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 17 போ் நோய்த் தொற்று காரணமாக இறந்துள்ளனா்.