குன்னூா்: நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிண்ணக்கொரை கிராமத்தில் புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கிண்ணக்கொரைப் பகுதி கேரள மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது. இப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், இங்குள்ள வனப் பகுதியில் இருந்து புலி ஒன்று சனிக்கிழமை இரவு சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை அங்கேயே நிறுத்தினா். இப்பகுதியில் புலியைக் காண்பது மிகவும் அரிது என்பதால் கேரள வனப் பகுதியில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தப் புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.