நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட திடீா் சோதனையில் 15 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 35,900 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட திடீா் சோதனையில் 15 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ரூ. 35,900 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் ஆகியவற்றுடன் 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிா்ப்பது, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிா்ப்பது, குளிா்பான பாட்டில்கள் விற்பனையைத் தடுப்பது போன்ற விழிப்புணா்வை வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களில் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்பட்டது.

இதற்காக உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் பணியாற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுதும் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது தடை செய்யப்பட்ட சுமாா் 15 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அபராதத் தொகையாக ரூ. 35,900 வசூல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com