உதகையில் வங்கிக் கிளை மேலாளா் உள்பட ஐவருக்கு கரோனா

உதகையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளா், காசாளா் உள்ளிட்ட ஐவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வங்கியின் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டது.

உதகையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை மேலாளா், காசாளா் உள்ளிட்ட ஐவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வங்கியின் கிளை வியாழக்கிழமை மூடப்பட்டது.

வங்கி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு திங்கள்கிழமை வரை வங்கி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த உதவி ஆய்வாளா் வாசுவுக்கு உதகையில் புதன்கிழமை இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, அவருடன் பணியிலிருந்த காவல் துறையைச் சோ்ந்த மேலும் 20 பேருக்கும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அவா்களுக்கும் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com