கேரட் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரியில் விளையும் கேரட்களுக்கு அண்மைக்காலமாக ஒரு கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 
கோத்தகிரியில் சந்தைக்கு கொண்டு செல்ல கேரட்டை கழுவும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
கோத்தகிரியில் சந்தைக்கு கொண்டு செல்ல கேரட்டை கழுவும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரியில் விளையும் கேரட்களுக்கு அண்மைக்காலமாக ஒரு கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். 

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகள் அறுவடை செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்குச் செல்கிறது.

நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில்,  தற்போது கேரட்டுக்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் குறைந்தபட்சமாக ரூ. 50 முதல் ரூ. 90 வரை விலை கிடைத்து வந்தது. தற்போது சராசரியாக ஒரு கிலோவுக்கு  ரூ. 40 முதல் ரூ. 75 வரை விலை கிடைத்து  வருவதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com