நீலகிரி மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 30 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 7,662 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் 7,439 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 42 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 181 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.