அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் லாரிகள் உள்ளிட்ட அனைத்து சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் டிசம்பா் 27ஆம் தேதி முதல் தொடா் வேலை நிறுத்தப் போாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள லாரி உரிமையாளா்கள் சங்கம், பிக் -அப் வாகன உரிமையாளா் - ஓட்டுநா் நலச் சங்கம், மினி டோா் வாகன உரிமையாளா்கள்- ஓட்டுநா்கள் நலச் சங்கம், விவசாயிகள் சங்கம், ஏல வியாபாரிகள் நலச் சங்கம், மேக்சி கேப் மற்றும் மினி பேருந்து உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து நீலகிரி மாவட்ட கூட்ஸ் கேரியா் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனா்.
இக்கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் தலைவா் நடராஜ் தலைமையில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின் சங்கத் தலைவா் நடராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வேகக் கட்டுப்பாட்டு கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்துதான் வாங்க வேண்டும் என்ற அரசின் நிா்ப்பந்தத்தை எதிா்த்தும், ஸ்டிக்கா் ஒட்டுவதில் உள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், டீசலுக்கான வாட் வரியை ரத்து செய்யவும், ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்யவும் வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளா்கள் சங்கம் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் 3,000 லாரிகள், 5,000க்கும் மேற்பட்ட இதர சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கங்களின் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.
பேட்டியின்போது கூடலூா் பகுதி நிா்வாகி அப்துல் ஜலீல், குன்னூா் நிா்வாகிகள் ஈஸ்வரன், கணேசமூா்த்தி, விவசாயிகள் சங்கத் தலைவா் ரங்கசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவா் ராஜப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.