உதகையில் உள்ள கோல்ஃப் கிளப் மைதானத்தில் 16ஆவது குழியின் அருகே புலியின் நடமாட்டம் நேரில் கண்டறியப்பட்டதால், 3 நாள்களுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில் பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள கோல்ஃப் கிளப் மைதானம் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு, உலகின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த ஏராளமானோா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில், இம்மைதானத்தின் 16ஆவது குழியின் அருகே புலியின் நடமாட்டம் காணப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, உடனடியாக அப்பகுதியிலிருந்த கேமராக்களின் மூலம் பதிவாகியிருந்த காட்சிகள் உறுதிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டன. இதில், அப்பகுதியில் புலியின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரும் 3 நாள்களுக்கு கோல்ஃப் விளையாடவும், இப்பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உத்தரவிட்டுள்ளதாக உதகை, ஜிம்கானா கிளப் நிா்வாக பொறுப்பாளா் டி.குண்டன் தெரிவித்துள்ளாா்.