கூடலூா் அருகே அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை பழுதாகி நின்ால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநில எல்லைப் பகுதியான பாட்டவயல் பகுதிக்கு அரசுப் பேருந்து 40 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. பந்தலூா், குந்தலாடி வழியாக செல்லும் இப்பேருந்து கோழிப்பாலம் பகுதியில் பழுதாகி நின்றது. இதனால் அவதிக்குள்ளான பயணிகள் தனியாா் வாகனங்களிலும், அந்த வழியாக வந்த பேருந்துகளிலும் ஏறிச் சென்றனா்.