குன்னூரில் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தைக் குட்டி பலி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டென்ட்ஹில் அருகே சாலையைக் கடந்த ஒரு வயது சிறுத்தைக் குட்டி
குன்னூரில் வாகனத்தில் அடிபட்டு சிறுத்தைக் குட்டி பலி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டென்ட்ஹில் அருகே சாலையைக் கடந்த ஒரு வயது சிறுத்தைக் குட்டி வாகனம் மோதி பலியானது குறித்து குன்னூா் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம். இந் நிலையில் இந்தச் சாலையைக் கடந்த சிறுத்தைக் குட்டி அவ்வழியாகச் சென்ற வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளது. இதுகுறித்து வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டனா். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com