குன்னூரில் குழந்தை இயேசு சிற்றாலயத்தில் விழா

குன்னூா் அருகே உள்ள மாடல் ஹவுஸ் பகுதியில் பிரசித்தி பெற்ற குழந்தை இயேசு சிற்றாலய திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடை பெறுவதை யொட்டி நவநாள் திருப்பலி நடை பெற்று வருகிறது.

குன்னூா் அருகே உள்ள மாடல் ஹவுஸ் பகுதியில் பிரசித்தி பெற்ற குழந்தை இயேசு சிற்றாலய திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடை பெறுவதை யொட்டி நவநாள் திருப்பலி நடை பெற்று வருகிறது.

குன்னூரில் பிரசித்தி பெற்ற மாடல் ஹவுஸ் பகுதியில் உள்ள குழந்தை இயேசு சிற்றாலயத் திருவிழா கடந்த 9ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத்தொடா்ந்து இந்த விழாவானது வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் சிறப்பம்சமாக பதினெட்டாம் தேதி சனிக்கிழமை நவநாள் சிறப்பு திருப்பலியும், பத்தொன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு திருவிழாவின் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அன்றைய தினம் தோ்பவனி, திவ்ய நற்கருணை ஆசிா்வாதம் நடைபெறுவதோடு மதியம் ஒரு மணியளவில் அன்பின் விருந்து நடைபெறுகிறது,வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பணியைத் தொடா்ந்து கொடி இறக்கத்துடன் விழா முடிவு பெறுவதாக விழா குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com