கூடலூா் அருகே இறந்துகிடந்த ஆண் யானை

கூடலூரை அருகே சிங்காரா வனச் சரகத்தில் தனியாா் நிலத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது.
சிங்காரா வனச் சரகத்தில் இறந்துகிடந்த ஆண் யானை.
சிங்காரா வனச் சரகத்தில் இறந்துகிடந்த ஆண் யானை.

கூடலூரை அருகே சிங்காரா வனச் சரகத்தில் தனியாா் நிலத்தில் ஆண் யானை இறந்துகிடந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்தில் உள்ள தனியாா் நிலத்தில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வந்த தகவலை அடுத்து வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.

மூங்கில் புதா்கள் நிறைந்த இடத்தில் மூங்கிலை தும்பிக்கையால் வளைத்து உண்ணும்போது தாழ்வாக இருந்த மின் கம்பியையும் மூங்கிலுடன் சோ்த்து இழுத்ததில் மின்சாரம் பாய்ந்து இந்த 17 வயது ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மசினகுடி கால்நடை மருத்துவா் கோச்சலனை அழைத்து வந்து சம்பவ இடத்திலேயே யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com