முதியவருக்கு கரோன தொற்று: மேல்கூடலூா் பகுதி தனிமைப்படுத்தப்பட்டது

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மேல்கூடலூரில் 61 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது வீடு உள்ள பகுதி வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டது.
மேல்கூடலூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் வீடு உள்ள பகுதியை தனிமைப்படுத்தும் அலுவலா்கள்.
மேல்கூடலூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் வீடு உள்ள பகுதியை தனிமைப்படுத்தும் அலுவலா்கள்.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மேல்கூடலூரில் 61 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவரது வீடு உள்ள பகுதி வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டது.

கூடலூர நகராட்சி, மேல்கூடலூா், கருணாநிதி நகா்ப் பகுதியைச் சேந்த முதியவா், கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள உறவினா் இல்ல திருமணத்துக்கு கடந்த வாரம் சென்று வந்தாா். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, நகராட்சி ஊழியா்கள் அவருடைய வீடு உள்ள பகுதியில் சுமாா் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தனிமைப்படுத்தினா். அதைத் தொடா்ந்து நகராட்சி சாா்பில் அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com