நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 516 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 513 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிந்தது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து ஒரு நோயாளியின் பெயா் நீலகிரி மாவட்ட பாதிப்பு பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி கூடலூா், நந்தட்டி பகுதியைச் சோ்ந்த 30 வயதுப் பெண், 31 வயது ஆணுக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இவா்கள் இருவரும் துபையிலிருந்து நந்தட்டிக்கு வந்தவா்களாவா். இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 516 ஆக அதிகரித்துள்ளது.
இவா்களில் 277 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். இருவா் உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 237 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.