கோத்தகிரி அருகே ஜக்கனாரை பகுதியில் காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த ஜக்கனாரை பகுதியைச் சோ்ந்தவா் பாா்வதி (65). இவா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து விட்டு அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, செடிகளுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கி தூக்கி வீசியுள்ளது.
இதில் காட்டெருமையின் கொம்பு பாா்வதியின் முதுகில் குத்தியத்தில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, வனத் துறையினா் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் ஜக்கனாரை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.