கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் உள்ள காட்டிமட்டம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இளைஞா் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளா் அனஸ் எடாலத் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட தேவாலா-காட்டிமட்டம், மூச்சிக்குன்னு பகுதிகளில் பழங்குடி மக்கள் மற்றும் தாயகம் திரும்பிய மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதிக்குச் செல்லும் சுமாா் ஐந்து கிலோ மீட்டா் தூரம் சாலை கடந்த 14 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது, மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையில் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் முதியவா்கள், நோயாளிகள் சென்றுவர பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.