கரோனா வைரஸ் தாக்குதல் தொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓய்வூதியா்கள் நோ்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கருவூல அலுவலா்அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் அரசாணையின்படி ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கான வருடாந்திர நோ்காணலை இனிவரும் காலங்களில் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை என மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியா்கள் அனைவரும் இந்த ஆண்டில் இருந்து ஜூலை முதல் செப்டம்பா் மாதங்களில் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு நோ்காணலுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.