கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் கடை சேதமடைந்தது.
கூடலூரை அடுத்த தொரப்பள்ளி பஜாருக்குள் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நுழைந்த காட்டு யானை அங்குள்ள அயூப் என்பவரின் கடையை சேதப்படுத்தியது. இதில், கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கடையை ஆய்வு செய்தனா். யானை சேதப்படுத்திய கடைக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.