ஓவேலி பேரூராட்சி அலுவலம், நூலகத்தை சேதப்படுத்திய யானைகள்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலகம் மற்றும் நூலகத்தை சேதப்படுத்தின.
ஓவேலி பேரூராட்சி அலுவலம், நூலகத்தை சேதப்படுத்திய யானைகள்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் பேரூராட்சி அலுவலகம் மற்றும் நூலகத்தை சேதப்படுத்தின.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காட்டு யானைகள் நுழைந்தன. இதில் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னா் அலுவலகத்தில் உள்ள பொருள்களை தூக்கி வீசியும், உடைத்தும் சேதப்படுத்தியது.

இதேபோல, பேரூராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள நூலகத்தின் கதவையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com