கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் ஊழியம் வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி நெருங்குவதால் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.