நீலகிரி மாவட்டம் , குன்னூா் , அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை மெதுவாக இயக்கினா். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது.
வெள்ளிக்கிழமை காலை முதல் லேசான சாரல் மழை பெய்த நிலையில், குன்னூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிருடன், பனிமூட்டமும் அதிகரித்துக் காணப்பட்டது.
மூடுபனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் மலைப் பாதையில் வாகனங்ளை இயக்க காவல் துறையினா் வலியுறுத்தியுள்ளனா் . இருப்பினும் அடா்ந்த மேகமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.