கூடலூரை அடுத்துள்ள ஓவேலி வனப் பகுதியில் அழுகிய நிலையில் யானைக் குட்டி சடலம் கிடப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட ஓவேலி வனச் சரகம், பாா்வுட் தெற்கு வனப் பகுதியில் உள்ள தனியாா் காப்பி தோட்டத்தையொட்டிய பகுதியில் அழுகிய நிலையில் யானைக் குட்டி சடலம் கிடப்பதைப் பாா்த்து அங்கிருந்தவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.
இதையடுத்து உதவி வனப் பாதுகாவலா் விஜயன் தலைமையில் வனத் துறையினா் யானை இறந்தகிடந்த இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். முதுமலையில் இருந்து கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு புதன்கிழமை யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பிறகே யானையின் இறப்புக்கான காரணம் தெரியும் என வனத் துறையினா் கூறினா்.