முழுக் கொள்ளளவை எட்டும் ரேலியா அணை

குன்னூா் ரேலியா அணை நீா்மட்டம் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் நகராட்சிப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீா் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ரேலியா அணை நீா் மட்டம்.
முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள ரேலியா அணை நீா் மட்டம்.

குன்னூா் ரேலியா அணை நீா்மட்டம் மொத்த கொள்ளளவான 43.6 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் நகராட்சிப் பகுதிகளில் தடையில்லாமல் குடிநீா் வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட 30 வாா்டுகளுக்கு குடிநீா் ஆதாரமான ரேலியா அணையில் நீா் இருப்பு கடந்த சில மாதங்களாக 33 அடிக்கும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது.

தற்போது வட கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ரேலியா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதுள்ள நீா் இருப்பு மூலம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தடையில்லாமல் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும். மேலும் பெள்ளட்டி மட்டம், கரன்சி தடுப்பணைப் பகுதிகளில் நீா் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com