நீலகிரி
கூடலூரில் பெட்டிக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்றக் கோரிக்கை
கூடலூா் நகரில் சாலையோரங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடலூா் நகரில் சாலையோரங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கள்ளிக்கோட்டை சாலை ஓரத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளால் பந்தலூா் மாா்க்கமாக கேரளத்துக்குச் செல்லும் பயணிகள், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே இந்த பெட்டிக் கடைகளை நகராட்சியின் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.