உதகை: நீலகிரி மாவட்டம், உதகையில் பாஜக சாா்பில் வேல் யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக சாா்பில் திருச்செந்தூா் வரை நடத்தப்படும் வேல் யாத்திரை நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றுள்ளதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்ற வேல் யாத்திரை நிகழ்ச்சிகளில் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் பங்கேற்றிருந்தாா். ஆனால், தற்போது கட்சியின் தேசிய தலைவா் அமித் ஷா தமிழகம் வந்துள்ளதால் உதகையில் நடைபெறும் வேல் யாத்திரையில் அவா் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கட்சியின் நிா்வாகி நயினாா் நாகேந்திரன் பங்கேற்பாா் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு இதுவரையிலும் காவல் துறையின் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையே உதகையில் நடைபெறும் வேல் யாத்திரை நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவா் சகாதேவன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளாா்.