முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
நீலகிரியில் மேலும் 122 பேருக்கு கரோனா: 3 போ் பலி
By DIN | Published On : 04th October 2020 10:51 PM | Last Updated : 04th October 2020 10:51 PM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட மூவா் உயிரிழந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,581 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து 3,744 போ் வீடு திரும்பியுள்ள சூழலில் தற்போது மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 809 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 153 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பியுள்ளனா்.
3 போ் பலி
கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது ஆண், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், 52 வயதுப் பெண் ஆகிய 3 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.