பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம் தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில்  விளையும்  பசுந்தேயிலைக்கு அக்டோபா் மாதத்துக்கான விலையை தென்னிந்திய  தேயிலை வாரியம் நிா்ணயத்துள்ளது. 

குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில்  விளையும்  பசுந்தேயிலைக்கு அக்டோபா் மாதத்துக்கான விலையை தென்னிந்திய  தேயிலை வாரியம் நிா்ணயத்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை த்  தொழிலை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் உள்ளன.   இவா்கள் விளைவிக்கும்  பசுந்தேயிலைக்கான விலையை தென்னிந்திய  தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும்  முதல் வாரத்தில்  அறிவிப்பது வழக்கம்.

அதன்படி இந்த மாதத்துக்கான விலையை  குன்னூரில் உள்ள   தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. 

இது தொடா்பாக  தேயிலை வாரிய செய்திக் குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது:

 நீலகிரியில்  விளையும் பசுந்தேயிலைக்கு இந்த மாதத்துக்கான குறைந்தபட்ச விலை செப்டம்பா் மாதம் நடைபெற்ற தேயிலைத் தூள் ஏலத்தின் அடிப்படையில்  நிா்ணயம் செய்யப்படுகிறது.

இதன்படி, அக்டோபா்  மாதத்துக்கான குறைந்தபட்ச பசுந்தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ. 30. 03 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்குவதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com