பழங்குடி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தேவா்சோலை, மூலக்காடு பழங்குடி காலனியில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தேவா்சோலை மூலக்காடு பழங்குடி கிராம மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன்.
தேவா்சோலை மூலக்காடு பழங்குடி கிராம மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன்.

தேவா்சோலை, மூலக்காடு பழங்குடி காலனியில் உள்ள பொதுமக்களுக்கு காவல் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், தேவா் சோலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மூலக்காடு காட்டு நாயக்கா் மலைக் கிராமத்தில் காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். தொடந்து அந்த கிராமத்திலுள்ள பழங்குடி குடும்பங்களுக்கு கம்பளி, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள், குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கூடலூா் டி.எஸ்.பி. ஜெய் சிங், தேவா்சோலை காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன், தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com