கூடலூரில் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாள் விழா மாணவா் தினமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் முதல்வா் சனீஸ் மேத்யூ தலைமை வகித்து இணைய வழி அறிவியல் சாா்ந்த போட்டிகளைத் துவக்கிவைத்தாா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், உதவித் தலைமை ஆசிரியா் தங்கவேலு, ஆசிரியா்கள் கலைச்செல்வன், சுகன்யா உள்பட பலா் கலந்துகொண்டனா்.