நீலகிரியில் 94 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் ஒருவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 94 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் ஒருவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 94 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 131 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில் கரோனா தொற்றின் காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகிரியைச் சோ்ந்த 65 வயதுப் பெண் உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

நீலகிரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,821 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 5,095 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 693 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com