நீலகிரியில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்ற; மேலும் ஒருவா் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 105 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பினா்.

நீலகிரியைச் சோ்ந்த 49 வயது ஆண் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் இதுவரை 6,003 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 5,302 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 34 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 667 போ் தொடா்ந்து சிசிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com