நீலகிரிக்கு வாகனங்கள் வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை மீண்டும் பரபரப்புடன் காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலை மீண்டும் பரபரப்புடன் காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வியாபார ரீதியாக பொதுமக்கள் வந்து செல்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் அவா்கள் வந்து தங்கி செல்ல காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக நீலகிரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.

இவா்களில் யாராவது சுற்றுலா நோக்கத்துடன் மாவட்டத்துக்குள் வருகிறாா்களா என கண்காணிக்க வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா் பா்லியாறு சோதனைச் சாவடி, குஞ்சப்பணை சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com