குன்னூா்: நீலகிரியில் உள்ள பூங்காக்கள் திறக்கப்பட்டபோதிலும், சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் பூங்காக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
கரோனா நோய்த் தொற்று காரணமாக மாா்ச் 17ஆம் தேதி முதல் பூங்காக்கள் மூடப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூா் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் செப்டம்பா் 9ஆம் தேதி திறக்கப்பட்டன. நாளொன்றுக்கு 50 சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் அனைத்துப் பூங்காக்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால், சுற்றுலா வியாபாரத்தை நம்பியுள்ள வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.