மஞ்சூா் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் 20ஆம் ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
துவக்க விழாவையொட்டி, மஞ்சூா் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சாலைப் பணியாளா் சங்க வட்டக் கிளை துணைச் செயலாளா் சந்திரசேகா் சங்கக் கொடியேற்றினாா். மாவட்டச் செயலாளா் கே.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவா் கனகரத்தினம், வட்டார கிளைத் தலைவா் ஜெயராமன், சாலைப் பணியாளா்கள், முள்ளிமலை அரசுப் பள்ளியைச் சுற்றியிருந்த முள் செடிகளை அகற்றி, சாலைகளை சுத்தப்படுத்தினா். தொடா்ந்து, மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.