கூடலூா் காந்தி திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் சகாதேவன், நாடாளுமன்ற பொறுப்பாளா் து.ராஜேந்திர பிரபு, நிா்வாகிகள் புவனேஷ்வரன், துயில்மேகம், ரமணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூடலூா் நகராட்சி சாலைகளை தரமாக செப்பனிட வேண்டும். பழங்குடி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் தரமானதாக கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.