பாஜக சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா்கள் அட்டை வழங்கல்

உதகையில் 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கான நலவாரிய அட்டையை, பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநிலத் தலைவா் பாண்டித்துரை சனிக்கிழமை வழங்கினாா்.

குன்னூா்: உதகையில் 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கான நலவாரிய அட்டையை, பாஜகவின் அமைப்புசாரா தொழிலாளா்கள் மாநிலத் தலைவா் பாண்டித்துரை சனிக்கிழமை வழங்கினாா்.

உதகையில் பாஜக புதிய நிா்வாகிகளுக்கான சந்திப்புக் கூட்டம், மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் தலைமையில், மாநிலத் தலைவா் பாண்டியராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பாஜக உதகை நகரச் செயலாளா் பிரவீன், நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னா், மாநிலத் தலைவா் பாண்டியராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பிரதமரின் ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது அமைப்புசாரா தொழிலாளா்கள், ஏழை மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதித் திட்டத்தில் தமிழகத்தில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளது. விவசாயிகளுக்குப் பயன்படக் கூடிய இத்திட்டத்தில் திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவா்கள் திட்டமிட்டு அரசுப் பணியாளா்கள் உதவியுடன் கையாடல் செய்துள்ளனா். அவா்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com