கூடலூா் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னனணு வாக்குப் பதிவு இயந்திரம் அனுப்பும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கூடலூா் சட்டப் பேரவைத் (தனி) தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. கோட்டாட்சியா் ராஜ்குமாா் மேற்பாா்வையில் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.