நீலகிரி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 8,840 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 8,610 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 50 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 180 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.