நீலகிரி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக உதகையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 46 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 9,604 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 9,075 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, தொற்றின் காரணமாக இதுவரை 51 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 478 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.